172. அருள்மிகு கற்பகநாதர் கோயில்
இறைவன் கற்பகநாதர்
இறைவி பால சுந்தரி, சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் விநாயகர் தீர்த்தம்
தல விருட்சம் பலா
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருக்கடிகுளம், தமிழ்நாடு
வழிகாட்டி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை - வேதாரண்யம் செல்லும் சாலையில் 15 கி.மீ தொலைவு சென்று கற்பகநாதர் குளம் பேருந்து நிறுத்தம் அடைந்து வலதுபுற தெருவில் திரும்பி சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம். இடும்பாவனம் கோயிலிருந்து 2 கி.மீ. திருத்துறைப்பூண்டியிலிருந்து 18 கி.மீ. தில்லைவளாகம் இரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirukadikulam Gopuramகற்பக விநாயகர் குளம் ஒன்றை உருவாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து வழிபட்டதால் 'கற்பகநாதர் குளம் என்னும் பெயர் பெற்றது. கடி - மணம். சிவமணம் நிறைந்த குளம் என்ற பொருளில் இவ்வூர் விளங்குகிறது.

மூலவர் 'கற்பகநாதர்' என்னும் திருநாமத்துடன், பெரிய சதுர வடிவ ஆவுடையுடன், 16 பட்டையுடன் கூடிய சிறிய பாணத்துடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'பால சுந்தரி' மற்றும் 'சௌந்தர நாயகி' என்னும் திருநாமங்களுடன் பெரிய வடிவில் காட்சி தருகின்றாள்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், காசி விஸ்வநாதர், பைரவர், சனி பகவான், நவக்கிரங்கள் சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com